Tuesday, October 18, 2011

தாஜ்மஹால்


தாஜ்மஹால் காதலின் சின்னம், ஏழு உலக அதிசயங்களுள் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. தாஜ்மஹாலின் மற்றொரு பக்கமான, அதன் கட்டிடக்கலை மற்றும்     தாஜ்மஹாலைப் பற்றிய ஷாஜஹானின் கனவுகள் பற்றி மிகச்சிலரே அறிந்திருப்பர்.

              டெல்லியிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆக்ரா. ஆக்ராவை ஆக்ரா கன்ட் என்று தான் அழைக்கப்படுகிறது. கன்ட் என்றால் இராணுவப்பகுதி என்று பொருள். ஆக்ரா இரயில் நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தாஜ்மஹால்.  தாஜ்மஹால் செல்ல மூன்று வழிகள் உள்ளன. அவை கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு வழிகள்.  தெற்கு வாசல் நேரே  தாஜ்மஹால் அமைந்துள்ளது. தெற்கு வாசல் வழியே உள்ளே சென்றால் தாஜ்மஹால் நம் கண் முன்னே பிரகாசிக்கும். நான்கு பக்கமும் தூண்களை கொண்டு நடுவே ஒரு பிரமாண்டமான வெள்ளை பளிங்கு மாளிகை, சூரிய ஒளி பளிங்கின் மீது பட்டு அதன் அழகை மேலும்  கூட்டுகிறது. 
தெற்கு வாயிலிலிருந்து தாஜ்மஹாலின் தோற்றம்
                                  
 தாஜ்மஹால் வரலாறு:
ஷாஜஹான் என்னும் முகலாய மன்னன் தன் மனைவி மும்தாஜின் பிரிவை தாங்க முடியாமல் அவளுக்காக எழுப்பிய காவியம், தாஜ்மஹால். காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் உலக அதிசயம் என்றால் அந்தத் தாஜ்மஹாலின் கட்டிடக்கலை பற்றிய செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். 
              நான்கு பெரிய கோபுர தூண்கள் வெள்ளை மாளிகையை சுற்றி நிற்கின்றன. தூரத்தில் நின்று பார்ப்பதற்கு ஒவ்வொரு தூணும் வெவ்வேறு உயரம் கொண்டதாய் தெரியும். ஆனால், நான்கு தூண்களும் ஒரே உயரத்துடன் இருப்பது இதன் சிறப்பு. மிக உயரமான வாயில் வழியே உள்ளே  நுழையும் போது அதன்  சுவர் முழுவதும் வெள்ளைப் பளிங்கில் செதுக்கிய நுண்ணிய கலைநயமிக்க வேலைபாடுகள் நம்மை வியக்க வைக்கும். மாளிகையின் உள்ளே சென்றால் பளிங்கினால் செய்த வேலியின் நடுவில் மும்தாஜ் மற்றும் ஷாஜகனின் கல்லறைகள்.  

மும்தாஜ் மற்றும் ஷாஜஹான் கல்லறைகள்
  மாளிகையின் நடுவில் மும்தாஜின் கல்லறை. அதற்கு அருகிலேயே ஷாஜஹானின் கல்லறை உள்ளது. மாளிகையின் உள்ளே குளிர்ச்சியாக இருப்பது நமக்கு ஒரு இதமான உணர்வை ஏற்படுத்தும். வேலியிலும் வேலைபாடுகள் அதிகம் காணப்படுகின்றன. பளிங்கு கற்களைக் கொண்டு இவ்வளவு நுணுக்கமாக செதுக்க முடியும் என்பதை பார்க்கும் போது பிரமிப்பு அதிகமாகிறது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்னரும் பளிங்கு வேலியின் பளபளப்பு  மற்றும் வளவளப்புத் தன்மை மாறாமல் இருப்பது அதன் இன்னுமொரு சிறப்பு. அப்படியே பின்புறம் வெளியே சென்றால் யமுனை ஆற்றின் அழகையும் ரசிக்கலாம். மிக நீண்ட அகலமான ஆறு நம்மை மேலும் பரவசத்தில் ஆழ்த்தும்.  

நுண்ணிய வேலைபாடுகள் நிறைந்த பளிங்கு வேலி:


 வேலியின் உள்ளே தெரிவது மும்தாஜ் மற்றும் ஷாஜஹான் கல்லறைகள்.


யமுனை நதியின் அழகிய தோற்றம் 
 தாஜ்மஹால் பற்றிய ஷாஜஹானின் கனவுகள்:


ஷாஜஹான் மும்தாஜிற்கு தாஜ்மஹால் எழுப்பியது போலவே தனக்கும் ஒரு மகாலை எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததாகவும், அவருடைய இறப்பிற்கு பின் அந்த மாளிகையில் அவருக்கு சமாதி எழுப்பவும் அவர் எண்ணம் கொண்டிருந்தார். அந்த மகாலை தாஜ்மஹாலிற்கு எதிரே, அதாவது யமுனை ஆற்றின் மறு கரையில் கட்ட வேண்டும் என்று எண்ணியிருந்தார். அதோடு இரண்டு மகாலையும் இணைப்பதற்கு வெள்ளியால் பாலம் அமைக்கவும் அவர் முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்குள்ளாக அவருடைய மகன் ஔரங்கசிப்பால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என வரலாறு கூறுகிறது. 
பளிங்கு கல்லில் பூக்கள் செதுக்கப்பட்டுள்ளது
பளிங்கினால் செதுக்கப்பட்டது 



யமுனை ஆற்றின் மறு கரையில் ஷாஜஹான் கல்லறை அமைப்பதற்காக தேர்ந்தெடுத்த இடமாக கருதப்படுவது

 
 ஆக்ரா கோட்டை:
தாஜ்மஹாலிலிருந்து ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதி தெரியும். கோட்டையின் நீண்ட சுவர்களும், அங்குள்ள  வெள்ளை கோபுரங்களும் மிக அற்புதமாக இருக்கும்.
 
தாஜ்மஹாலிலிருந்து தெரியும் ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதி
இத்தனை பெருமைமிக்க, வரலாற்று சிறப்புமிக்க தாஜ்மஹால் இப்போது சற்று பொலிவிழந்து காணப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுவதன் காரணமாக வெள்ளை மாளிகையின் பொலிவு சற்றே மங்கிக்கிடப்பது வேதனை அளிக்கிறது. நமது இந்திய அரசு உலக அதிசயமான தாஜ்மஹாலை காக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது.

டெல்லியிலிருந்து இந்திய சுற்றுலாத்துறை போக்குவரத்து வசதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு செய்து கொடுக்கின்றது. பல்வேறு நாட்டினரும் தாஜ்மஹாலைக் காண ஆக்ராவிற்கு வருகை தருகின்றனர். தாஜ்மஹாலின் அழகைக் கண்டு வியக்கின்றனர். இரயிலில் பயணம் செய்தால் 3 மணி நேரத்தில் ஆக்ரா கண்ட்டை அடையலாம். நிஜாமுதினிலிருந்து பல்வேறு இரயில்கள் ஆக்ரா வழியாக செல்கின்றன. அவை மூலமாகக் கூட நாம் ஆக்ராவை சென்றடையலாம். ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம், புகைப்படம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை. ஆக்ராவிற்கு சென்றால் தாஜ்மஹால் மட்டுமின்றி ஆக்ரா கோட்டை மற்றும் ஆக்ராவிற்கு அருகிலுள்ள மற்ற சுற்றுலாத்தலங்களையும் கண்டு களிக்கலாம்.

1 comment:

  1. Hi sir...
    The way of narration is nice. you simply narrated what you wanted to say... The thoughts that you have all in your mind is not delivered here. Hope you will post some more about your experiences later. I think still you have a lot to say about this Taj Mahal visit sir. I am awaiting your more good posts like this.. My best wishes to you sir!!!....

    ReplyDelete