ஆக்ரா கோட்டை:
முகலாயப் பேரரசர்களின் கோட்டை. பல்வேறு முகலாய மன்னர்களால் ஆளப்பட்ட, பல்வேறு சரித்திர ரகசியங்களை உள்ளடக்கிய கோட்டையைப் பற்றி தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். கோட்டையின் தோற்றமே ஆயிரமாயிரம் கதைகள் சொல்கின்றன. கோட்டையில் 30 சதவீதம் தான் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. மீதி 70 சதவீதம் இந்திய இராணுவப் படையின் ஆயுதங்களை வைப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றது என்பதை நம்மால் அறிய முடிகிறது. கோட்டையின் உள்ளே நுழையும் போது கோட்டையை சுற்றியும் அகழி இருப்பது கோட்டையின் பிரமாண்டத்தையும், பாதுகாப்பையும் நமக்கு உணர்த்துகிறது.
முகலாயப் பேரரசர்களின் கோட்டை. பல்வேறு முகலாய மன்னர்களால் ஆளப்பட்ட, பல்வேறு சரித்திர ரகசியங்களை உள்ளடக்கிய கோட்டையைப் பற்றி தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். கோட்டையின் தோற்றமே ஆயிரமாயிரம் கதைகள் சொல்கின்றன. கோட்டையில் 30 சதவீதம் தான் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. மீதி 70 சதவீதம் இந்திய இராணுவப் படையின் ஆயுதங்களை வைப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றது என்பதை நம்மால் அறிய முடிகிறது. கோட்டையின் உள்ளே நுழையும் போது கோட்டையை சுற்றியும் அகழி இருப்பது கோட்டையின் பிரமாண்டத்தையும், பாதுகாப்பையும் நமக்கு உணர்த்துகிறது.
ஆக்ரா கோட்டையின் முகப்புத் தோற்றம் |
கோட்டையின் நீண்ட சுவர் |
கோட்டையின் நீண்ட சுவரும் அதன் அகலமும், படை வீரர்கள் கோட்டையை பாதுகாப்பதற்காக பணியில் ஈடுபடுவதற்கு ஏற்ப கோட்டை சுவரை வடிவமைத்துள்ளனர். கோட்டையின் பின்புறம் உள்ள நீண்ட சுவரும் அதற்கு பின் தெரியும் யமுனை நதியும் படத்தில் காணலாம்.
(அடர்ந்த புதர்களும் மரஞ்செடி கொடிகளும் கோட்டையின் அழகை குறைக்கின்றன.)
ஆக்ரா கோட்டை - அகழி |
ஆக்ரா கோட்டையை சுற்றியுள்ள அகழியின் ஒரு பகுதி.
ஆக்ரா கோட்டை
ஆக்ரா கோட்டையின் பிரமாண்டமான கதவு
|
ஆக்ரா கோட்டையின் உள்ளே செல்லும் போதே என்னுடைய கற்பனைகள் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. ஒரு பெரிய மரக்கட்டையாலான கதவு. பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாய் அதே நேரம் மிக உறுதியாகவும் இருந்தது.
கோட்டை கதவைத் தாண்டி உள்ளே சென்றால் சற்றே சாய்வான படிகள் அல்லாத பாதை. பாதையின் இரண்டு பக்கமும் இரு பெரும் சுவர்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றது. உள்ளே நடந்து செல்லும் போது அக்காலத்தில் மன்னர்கள் கோட்டையின் உள்ளே நடந்து செல்கையில் இருபக்க சுவர்களின் மேல் நின்று மலர்கள் தூவுவதும், மன்னரை வாழ்த்து கூறி கரகோஷம் எழுப்புவதும் என் கண் முன் நின்றன. நினைப்பதற்கே பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
வெள்ளை மண்டபம் |
உள்ளே வெள்ளை மண்டபம், அதன் கட்டமைப்பு மிக நேர்த்தியாக உள்ளது. வெள்ளை சலவைக் கல்லினால் செதுக்கப்பட்ட அரசர்கள் நின்று பார்வையிடும் இடத்தையும் அங்கு காண முடிகிறது. சற்றே அதன் பளபளப்புத் தன்மை மங்கியிருந்தாலும், அதிலுள்ள கலைத்திறன் மிக்க நுண்ணிய வேலைபாடுகள் நம் கண்களை இன்னும் விரிவடையச் செய்கின்றன. இதற்கு அருகிலேயே மேலே செல்வதற்கு படிகளும் உள்ளன. மேலே ஏறி சென்றால் இடது பக்கம் வெள்ளை சலவை கல்லினால் செதுக்கப்பட்ட மன்னர்கள் பிரத்யேகமாக தொழுகை செய்வதர்க்கென்று ஓர் சிறிய இடம். முழுவதும் வெள்ளை பளிங்கினாலான இந்த மசூதி முகலாய மன்னன் ஷாஜஹானால் கட்டப்பட்டது. அதன் குறிப்புகளை கல்வெட்டில் செதுக்கி அங்கேயே பதித்துள்ளனர்.
ஷாஜஹானால் கட்டப்பட்ட மசூதி |
அதை ரசித்து விட்டு மற்றொரு பக்கம் வந்தால் ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹாலின் அழகிய தோற்றம் நம்மை மேலும் பரவசமடையச் செய்கிறது. கோட்டையின் ஒரு பக்கத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ்மஹால் தெரியும் வண்ணம் கோட்டையை வடிவமைத்திருப்பது சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அறைக்கும் வெளியே ஒரு கல்வெட்டு உள்ளது. பல அறைகள் பூட்டியே கிடக்கின்றன. பூட்டியிருக்கும் அறைகளுக்குள்ளே என்ன இருக்கும், எப்படி இருக்கும் என்று எல்லையில்லா கற்பனை எனக்குள் எட்டியது.
தாஜ்மஹாலின் தோற்றம் |
ஷாஜஹானால் மறு சீரமைப்பு செய்யப்பட்ட பகுதி முழுவதும் தாஜ்மஹால் தெரியுமாறு அமைக்கப்பட்டது. கனவு காண்பதற்கு என்று தனியாக ஒரு அறை, இன்னும் பல அறைகள் பலப்பல விஷயங்களுக்காக கட்டியிருக்கின்றனர். தன் கண் பார்வையிலிருந்து எப்போதும் மும்தாஜ் விலகிவிடக் கூடாதென்று தாஜ்மஹாலையும், அதை எந்நேரமும் தான் ரசித்து கொண்டிருப்பதற்காக ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதியையும் ஷாஜஹான் மிக கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டியுள்ளார்.
ஷாஜஹானின் அறை:
மும்தாஜ் இறப்பின் செய்தியை கேள்வியுற்று ஷாஜஹான் ஒரு தனியறையில் உள்சென்று தாளிட்டு ஒரு வாரத்திற்கும் மேல் வெளியே வராமல் மும்தாஜ் நினைவாக அழுது கொண்டிருந்தார். அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை அவ்வறையிலிருந்து வந்த முனகல் சத்தத்தை வைத்தே தெரிந்து கொண்டனர். பின்னர்தான் ஷாஜஹான் மும்தாஜுக்காக ஒரு மஹால் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் பூட்டிக்கொண்டதாகக் காட்டப்படும் அறை இன்றும் பொதுமக்கள் பார்வைக்கு உள்ளது. ஆனால் அவ்வறை பூட்டப்பட்டுள்ளது.
ஷாஜஹானின் அறை |
அந்த அறையை பார்த்த பொழுது அதனுள் என்ன இருக்கும், ஷாஜஹான் எப்படி அதனுள் இருந்திருப்பார் என்ற என் கற்பனை மேலும் இரட்டிப்பானது. மேலும் அதன் உள்ளே சென்று பார்க்கும் ஆர்வமும் என்னுள் எழுந்தது. இந்த அறை மும்தாஜினுடையது. அவளுடைய இறப்பிற்கு பின் ஷாஜஹான் இந்த அறையில் தான் தன்னுடைய வாழ்நாளை கழித்தார். பின்னர் ஷாஜஹானுடைய மகன் ஔரங்கசிப்பால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதும் இந்த அறையில் தான். இந்த அறைக்கு எதிரில் ஒரு மண்டபம் உள்ளது. பளிங்கினால் செதுக்கப்பட்ட அந்த மண்டபம் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.
மண்டபத்தின் தரையில் பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டுள்ள கலைநயமிக்க வேலைபாடுகள். மேலும் பல அறைகள் மிக்க வேலைபாட்டுடனும், கலைநயத்தோடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கதவுகளையும் நம்மால் காண முடிகிறது. எண்ணற்ற அறைகள் இருந்த போதிலும் அவை அனைத்தும் பூட்டியே கிடப்பதால் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. ஒவ்வொன்றாக பார்த்து பிரமித்து கோட்டையின் வெளிப்பிரகாரத்திற்கு வந்தால் கல்லினால் செதுக்கப்பட்ட ஒரு பெரிய தொட்டி உள்ளது. அது ஜகாங்கீர் குளிப்பதற்காக செய்யப்பட்ட தொட்டி. சுமார் 6 அடி உயரம் கொண்ட தொட்டி நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஜகாங்கீர் தொட்டி |
கோட்டையின் உள்ளே உள்ள சிவப்பு கல்லில் செதுக்கப்பட்ட வாயிலை கீழுள்ள படத்தில் காணலாம்.
மன்னர்களின் வாழ்க்கை முறைகளும் அவர்களின் கலாச்சாரங்களும் என்னை
மென்மேலும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா கோட்டையை முழுவதுமாக கண்டு ரசிக்க ஒரு நாள் மட்டும் போதாது. மேலும், அக்கால மன்னர்களால் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன என்பதை அங்குள்ள கல்வெட்டுக்களால் காண முடிகிறது.
இங்கு தான் வீர சிவாஜியை அக்பர் கைது செய்தார். இன்றும் இக்கோட்டைக்கு வெளியே வீர சிவாஜி குதிரையில் வாள் ஏந்தியபடி நிற்கிறார்.
வீர சிவாஜி |
இன்னும் ஆயிரமாயிரம் கதைகள் இது போன்ற கோட்டைகளில் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை உள்ளே சென்று ஆராய்ந்தால் நமக்கு பிரமிப்பும், ஆச்சர்யங்களும் நிறையவே ஏற்படும்.